செய்திகள்
முன்னாள் நீதிபதி கர்ணன்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி கர்ணன் மருத்துவமனையில் அனுமதி

Published On 2020-12-08 10:37 GMT   |   Update On 2020-12-08 10:37 GMT
நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான முன்னாள் நீதிபதி கர்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுவரை ஏன் கர்ணனை கைது செய்யவில்லை? என அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து சென்னை ஆவடியில் இருந்த முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News