செய்திகள்
கோப்புபடம்

கயிற்றால் கழுத்தை நெரித்து பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர் கைது

Published On 2020-12-05 15:06 GMT   |   Update On 2020-12-05 15:06 GMT
பெரம்பலூர் கயிற்றால் கழுத்தை நெரித்து பெண்ணை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சம்பூரணம்(வயது 30). இவர்களுக்கு ஷஸ்மிதா(10), அஷ்(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குழந்தைகளுடன் தனியாக இருந்த சம்பூரணத்திடம், அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஸ்ரீரங்கன் மகன் ராஜா(19) தகராறு செய்துள்ளார். 
இதனால் சம்பூரணத்திற்கும், ராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ராஜா ஸ்கிப்பிங் கயிற்றால் சம்பூரணத்தின் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது சம்பூரணத்தின் குழந்தைகள் கதறி அழுதுள்ளனர். அப்போது ராஜா இதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக அந்த குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். 

தற்போது சம்பூரணம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சம்பூரணத்தின் தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News