செய்திகள்
தேனி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
தேனி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 44). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவி உமா மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. மேலும் அவர் குடிபழக்கத்தை நிறுத்த முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த தங்கத்துரை சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கத்துரை நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.