செய்திகள்
சென்னை ஈக்காட்டுத்தாங்கல்

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

Published On 2020-12-05 02:03 GMT   |   Update On 2020-12-05 02:03 GMT
சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
சென்னை:

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நகரில் பல பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சென்னை கே.கே.நகர், வேளச்சேரி, அமைந்தகரை, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட நகரில் பல இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது.

சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலை பகுதி முழுவதும் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். அச்சாலை முழுவதும் முழங்கால் அளவு தாண்டி மழைநீர் சூழ்ந்திருக்கிறது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து முழுமையாக முடங்கி கிடக்கிறது. குடியிருப்புவாசிகளும் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாதவாறு தவிக்கிறார்கள். அப்பகுதியில் உள்ள கடைகளும் முடங்கி கிடக்கின்றன.

இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் பள்ளிக்கரணை, முடிச்சூர், விளாங்காடுபாக்கம் போன்ற புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது.
Tags:    

Similar News