செய்திகள்
வடகிழக்கு பருவமழை- ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 36.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவாகும் இயல்பான மழை அளவை விட 16 சதவீதம் குறைவாகவே மழை பெய்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர மழை நிலவரப்படி தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவீதம் மட்டுமே குறைவான மழை பெய்துள்ளது.
அதன்படி பார்க்கும்போது ஒரே நாளில் 14 சதவீதம் மழைப்பொழிந்து இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 36.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.