செய்திகள்
ஆர்ப்பாட்டம்

சலுகைகள் வழங்கக்கோரி ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-04 10:20 GMT   |   Update On 2020-12-04 10:20 GMT
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில துணைத்தலைவர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதியம் பெற்று வரும் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் அனைவருக்கும் திருத்திய ஓய்வூதியம் கிடைக்க உடனடியாக அரசாணை வெளியிட்டு, அதை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு முழு அரசுப்பணி அரசாணையின்படி அரசு ஊழியர் பெறும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம், குடும்ப நல நிதி, மருத்துவ நல நிதி, பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News