செய்திகள்
ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபர் கைது
ஆன்லைனில் ரம்மி விளையாடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் மூப்பக்கோவில் பாபுகுளம் வழிநடப்பில் வசிப்பவர் ரமேஷ் (வயது 36). இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதாக சைபர் கிரைம் போலீஸ் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரமேஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.