செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரையில் 32 பேருக்கு கொரோனா

Published On 2020-12-04 09:08 GMT   |   Update On 2020-12-04 09:08 GMT
மதுரையில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 24 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 799 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் மதுரையில் நேற்று 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 225 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுபோல், மதுரையில் நேற்றும், நேற்று முன்தினமும் யாரும் உயிரிழக்கவில்லை. மதுரையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 440 ஆக உள்ளது.
Tags:    

Similar News