செய்திகள்
கைது

சேலத்தில் செல்போன்கள் பறித்த 3 வாலிபர்கள் கைது

Published On 2020-12-04 05:36 GMT   |   Update On 2020-12-04 05:36 GMT
சேலத்தில் செல்போன்கள் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் செவ்வாய்பேட்டை தெய்வநாயகபிள்ளை தெரு பகுதியில் தனியாக நடந்து செல்பவர்களை வழிமறித்து செல்போன்கள் பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்றது. இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்பேட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் செவ்வாய்பேட்டை உடையார் தெருவை சேர்ந்த விஜய் (வயது 24), குகை பகுதியை சேர்ந்த சக்திவேல் (25), வல்லரசு (21) ஆகியோர் என்பதும், இவர்கள் சாலையில் நடந்து சென்றவர்களிடம் செல்போன்கள் பறித்த கும்பல் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News