செய்திகள்
தற்கொலை

தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-12-04 05:01 GMT   |   Update On 2020-12-04 05:01 GMT
தஞ்சை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை விளார் ரோடு, சியோன் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ்குமார்(வயது 26). இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். ரமேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ரமேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் அவரை ராஜேந்திரன் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News