செய்திகள்
விக்கிரவாண்டி அருகே மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் தும்பூர் கிராமத்தில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் தும்பூர் கிராமத்தில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல அலுவலர் குருசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், புரெவி புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் தெருக்களிலும், குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைப்பது குறித்தும், கழிவுநீர் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சுத்தம் செய்தல் குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தப்படுத்தி குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, பாபு, பணி மேற்பார்வையாளர்கள் கங்காதரன், தேவி, நக்கீரன், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்