செய்திகள்
வேளாண் சட்டங்களால் பாதிப்பு இல்லை- முதல்வர் பழனிசாமி
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம்:
சேலத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணி, கொரோனா தடுப்பு பணி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி கூறியதாவது:-
மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளை காப்பது வேளாண் சட்டங்கள். தேவையில்லையெனில் விற்பனை ஒப்பந்தத்தில் இருந்து விவசாயிகள் விலகிக் கொள்ளலாம் என்றார்.