செய்திகள்
கைது

சூலூர் அருகே செல்போன் திருடிய 2 பேர் கைது

Published On 2020-12-02 13:55 GMT   |   Update On 2020-12-02 13:55 GMT
சூலூர் அருகே செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சபீர் (வயது27). இவர் சூலூரை அடுத்த அரசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைக்கு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு தனது செல்போனை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு பொருட்கள் வாங்க கடைக்குள் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று சபீரின் செல்போனை திருடி தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது நண்பரின் உதவியுடன் துரத்தி சென்று அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போனை திருடிய சின்னியம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (37), தினேஷ் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News