செய்திகள்
நாமக்கல்லில் சிறுமி விஷம் குடித்து உயிரிழப்பு
நாமக்கல்லில் சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக தொழிலாளி மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் போதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45). பஸ் பாடிகட்டும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (20).
இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக பாபு, அவருடைய மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் போதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45). பஸ் பாடிகட்டும் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (20).
இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக பாபு, அவருடைய மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.