செய்திகள்
மோகனூர் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மோகனூர் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மோகனூர்:
மோகனூர் வட்டார சுகாதார துறை அதிகாரிகள், பணியாளர்கள் வாங்கல் பிரிவு ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தும், மேலும் முககவசம் அணிவதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மோகனூர் வட்டாரத்தைச் சேர்ந்த நடமாடும் மருத்துவ குழு டாக்டர் ரேகா தலைமையிலான மருத்துவக்குழுவினர் இந்த சோதனையின் போது, 121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
இதில் மோகனூர் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வராசா, சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், ரகுபதி உள்பட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.