செய்திகள்
கணவர் அருண்பாண்டியனுடன் வளர்மதி மற்றும் அவரது மகள்கள்.

கணவன் இறந்த சோகத்தில் 2 மகள்களுடன் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-30 21:00 GMT   |   Update On 2020-11-30 21:00 GMT
மதுரையில் கணவன் இறந்த சோகத்தில் பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:

திருச்சியை சேர்ந்தவர் அருண்பாண்டியன், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி வளர்மதி (வயது 38). இந்த தம்பதிக்கு அகிலா (20), பிரீத்தி (17) என்ற மகள்கள் இருந்தனர். அகிலா மதுரை அரசு கல்லூரியிலும், பிரீத்தி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருண்பாண்டியனுக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மதுரையில் நோய்க்கு சிகிச்சை பெற்றார். எனினும் கடந்த ஜூலை மாதம் அவர் பரிதாபமாக இறந்தார். கணவரை இழந்ததில் இருந்து வளர்மதி வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வளர்மதி, தனது 2 மகள்களுடன் மாடியில் உள்ள அறையில் படுக்க சென்றார். நேற்று காலை வெகு நேரமானதாலும், கதவை தட்டியும் யாரும் திறக்காததாலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வளர்மதி, அவரது மகள்கள் அகிலா, பிரீத்தி ஆகியோர் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர்கள் செல்லமாக வளர்த்த நாய் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையிலும் இருந்தது.

அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், அருண்பாண்டியன் இல்லாத உலகில் வாழ பிடிக்கவில்லை, எனவே அவரிடமே நாங்கள் செல்கிறோம். அருண்பாண்டியனின் குடும்பத்தினர் சொத்து உள்ளிட்ட எவற்றிக்கும் உரிமை கொண்டாட கூடாது. இறுதி காரியத்தையும் அவர்கள் செய்யக்கூடாது என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பே தங்களது குடும்ப புகைப்படத்துக்கு பொட்டு, பூ வைத்துள்ளனர். அவர்களுக்கு பணக்கஷ்டம் எதுவும் இல்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
Tags:    

Similar News