செய்திகள்
கோப்பு படம்.

மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்த தற்காலிக பணியாளர் பலி

Published On 2020-11-30 14:24 GMT   |   Update On 2020-11-30 14:24 GMT
மின்கம்பத்தில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய தற்காலிக பணியாளர் பலியானார்.
மன்னார்குடி:

மன்னார்குடி அருகே அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52). ஊராட்சியில் உள்ள மின் விளக்குகளை சரி செய்யும் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று வேட்டை திடல் அருகே ஆலாச்சேரி கிராமத்தில் பழுதான மின் விளக்கிற்கு பதிலாக புதிய மின் விளக்கை பொருத்தி கொண்டிருந்தார். அப்போது இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்ததால் மின் கம்பத்தில் இருந்து மாணிக்கம் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News