செய்திகள்
கைது

ஆவூர் அருகே ஓட்டலில் மது விற்றவர் உள்பட 2 பேர் கைது

Published On 2020-11-30 10:35 GMT   |   Update On 2020-11-30 10:35 GMT
ஆவூர் அருகே ஓட்டலில் மது விற்றவர் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆவூர்:

ஆவூர் அருகே உள்ள பேராம்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது பேராம்பூரில் ஓட்டல் நடத்தி வரும் சுப்பிரமணியன் (வயது 51) என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து ஓட்டலில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல, ஆவூரில் காட்டுப்பகுதியில் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த செங்களாக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (37) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News