செய்திகள்
ரஜினிகாந்த்

சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி

Published On 2020-11-30 07:58 GMT   |   Update On 2020-11-30 10:46 GMT
அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். இதனால் சஸ்பென்சை ரஜினி இன்று உடைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர். 

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், பால்கனியில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பதாக கூறினார். 

என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News