செய்திகள்
கோப்புபடம்

குழித்துறை அருகே அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை

Published On 2020-11-29 14:22 GMT   |   Update On 2020-11-29 14:22 GMT
குழித்துறை அருகே அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே பாகோடு மேலபறையன்விளையை சேர்ந்தவர் கணேசன் (வயது 57). இவர் அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். 

கடந்த சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கணேசன், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தும் திராவகத்தை குடித்து மயங்கி விழுந்தார். 

அவரை உறவினர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News