செய்திகள்
கோப்புபடம்

சாத்தான்குளம் அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-29 09:50 GMT   |   Update On 2020-11-29 09:50 GMT
சாத்தான்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:

தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், முத்துசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நாயனூர் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தாண்டவன்காடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் ரகுபதி (வயது 39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.170 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் தட்டார்மடம் பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட சிறுநாடார்குடியிருப்பு சித்திரைப்பட்டு மகன் மணிகண்டன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், ரூ.120 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News