செய்திகள்
கைது

பொன்னேரி அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- ஒருவர் கைது

Published On 2020-11-29 05:45 GMT   |   Update On 2020-11-29 05:45 GMT
பொன்னேரி அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொன்னேரி:

பொன்னேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் பொன்னேரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரியை அடுத்த தடபெரும்பக்கம் சிங்கிலிமேடு கிராமத்திற்கு செல்லும் வழியில் இமானுவேல் (வயது 45) என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் கோணிப் பையில் இருந்த மூட்டையை சோதனையிட்ட போது 7 பெரிய மூட்டைகளில் 200 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர் போலீசார் இமானுவேலை கைது செய்தனர்.
Tags:    

Similar News