செய்திகள்
தோகைமலை அருகே மது விற்ற 2 பேர் கைது
தோகைமலை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை அருகே உள்ள வடசேரியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் சின்னையன்(60). இவர்கள் 2 பேரும் வடசேரி பெரியகுளத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள முட்புதர்களில் மது விற்றதாக தோகைமலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.