செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 166 பேர் மீது வழக்கு

Published On 2020-11-29 05:11 GMT   |   Update On 2020-11-29 05:11 GMT
நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாத 166 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போலீசாரும் முககவசம் அணியாமல் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 166 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.33 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News