செய்திகள்
தோகைமலை அருகே நிலத்தகராறு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு
தோகைமலை அருகே நிலத்தகராறு தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தோகைமலை:
தோகைமலை அருகே உள்ள தந்திரிபட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 45). இவரது மனைவி மலைக்கொழுந்தி. இவர்களுக்கு சொந்தமான நிலம் கொசூர் அருகே மேட்டூரில் இருந்து உள்ளது. இந்த நிலத்தை மலைக்கொழுந்தியின் உறவினர்களான அதேபகுதியை சேர்ந்த பெருமாள் (50), மங்கான் (45), மலைக்கொழுந்தான் (43), முருகன் (50), வெள்ளையன் (40), சீரங்கன் (70), பழனி (35) ஆகிய 7 பேரும் சேர்ந்து மலைக்கொழுந்திக்கு கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் பூசாரி மேட்டூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை ஏன் தர மறுக்கிறீர்கள்? என்றுகேட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் உள்பட 7 பேரும் சேர்ந்து, பூசாரியிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் 7 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.