செய்திகள்
புதுக்கடை அருகே அனுமதியின்றி போராட்டம் நடத்திய 24 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே அனுமதியின்றி போராட்டம் நடத்திய 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கடை:
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் புதுக்கடை தபால்நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.
இதுதொடர்பாக புதுக்கடை போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை தலைவர் ராஜன் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.