செய்திகள்
மின்தடை

நாகர்கோவிலில் வருகிற 1-ந்தேதி மின்தடை

Published On 2020-11-28 09:05 GMT   |   Update On 2020-11-28 09:05 GMT
நாகர்கோவிலில் வருகிற 1ந்தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் மின்பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்வதிபுரம், எம்.எஸ். ஆசீர்வாதம் தெரு, சர்ச் ரோடு, ஹனிபா நகர், பிளசண்ட் நகர், கே.பி.ரோடு, தம்மத்துக்கோணம், கோணம், ஞானம் காலனி, ஏ.ஆர். கேம்ப், இருளப்பபுரம், பாரதிநகர், பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் மவுண்ட் ரோடு, புன்னைகாட்டு விளை, பட்டகசாலியன் விளை ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. 

இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News