செய்திகள்
நிவர் புயலால் பெரிய சேதம் ஏற்படவில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது.
* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் பெற்றது ஒட்டுமொத்த முயற்சியாகும்.
* நிவர் புயலால் வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழை பெய்துள்ளது.
* தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை.
* தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
* ‘இந்தியா டுடே’ விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் கலெக்டர்களுடனான ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது.
* அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் விருது பெற பாடுபட்டவர்களுக்கு நன்றி. அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் பெற்றது ஒட்டுமொத்த முயற்சியாகும்.
* நிவர் புயலால் வேலூர், ராணிப்பேட்டையில் அதிக மழை பெய்துள்ளது.
* நிவர் புயல் காரணமாக ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
* நிவர் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிறப்பான நடவடிக்கை எடுத்த கலெக்டர்களுக்கு பாராட்டுகள்.
* தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை.
* தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
* நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
* ‘இந்தியா டுடே’ விருதுக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.