செய்திகள்
தாராபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி உலக சாதனை
தாராபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமி 18 தலைப்புகளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சென்னியப்பநகரை சேர்ந்த மல்லீஸ்வரன்-அனிதா தம்பதியின் மகள் எம்.ஏ.சக்தி வெண்பா (வயது 4). இந்த சிறுமி தாராபுரம் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இந்த நிலையில் 18 தலைப்புகளை பாடமாக கொண்டு நாடுகளின் தேசிய கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள், தமிழ் மாதங்கள் மற்றும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் 20-க்கும் மேற்பட்ட காய்கறிகளின் பெயர்கள், உயிர்மெய் மற்றும் ஆயுதஎழுத்துகள், நதியின் பெயர்கள், பழங்களின் பெயர்கள் உள்ளிட்ட 18 தலைப்புகளை மனப்பாடமாக ஒப்புவித்தார்.
இது குறித்து சிறுமியின் தாயார் அனிதா கூறுகையில் ‘எனது மகள் ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு’, ‘நோபல் வேர்ல்டு ரெக்கார்டு’ மற்றும் ‘கலாம் வேர்ல்டு ரெக்கார்டு’ ஆகிய 3-க்கும் மனப்பாடமாக ஒப்புவித்த வீடியோ பதிவுகளை கடந்த அக்டோபர் மாதம் அனுப்பி வைத்தோம்.
இதனைத்தொடர்ந்து 3 நிறுவனங்களும் எனது மகள் சக்தி வெண்பாவிற்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கினர். 3 நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.