செய்திகள்
வாடிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை
வாடிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 53). தொழிலாளி. உடல் நலக்குறைவால் மனம் உடைந்து காணப்பட்ட உதயகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.