செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

உசிலம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2020-11-27 08:15 GMT   |   Update On 2020-11-27 08:15 GMT
உசிலம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (வயது 65). இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். மீண்டும் அவர் வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் சங்கிலி, ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராமர் இது குறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News