செய்திகள்
கைது

சிந்துபட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

Published On 2020-11-27 08:02 GMT   |   Update On 2020-11-27 08:02 GMT
சிந்துபட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

சிந்துபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள முனுசாமி கோவில் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த வைரன் (வயது 37) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வைரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News