செய்திகள்
நிவாரண முகாமில் கமல்ஹாசன்

நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் - கமல்ஹாசன்

Published On 2020-11-26 19:04 GMT   |   Update On 2020-11-26 19:04 GMT
நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை சைதாப்பேட்டை நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். 

அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும். புயல், வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொண்ட போதும் எந்தப் பலனும் இல்லை.

புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லாத அளவில் இருந்தது. புயல் நிவாரணப் பணியில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். நிவாரணம் வழங்குவதை விட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறினார்.
Tags:    

Similar News