செய்திகள்
தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருக்கோவிலூரில் தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2020-11-25 12:55 GMT   |   Update On 2020-11-26 12:20 GMT
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது.
திருக்கோவிலூர்:

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் டி.என்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தங்கம், அ.சா.ஏ.பிரபு, கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நகர செயலாளர் ஆர்.கோபி என்கிற கோபிகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற தேர்தல் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், முகவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார். 

இதில் முன்னாள் எம்.பி. ஆதி.சங்கர், விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் டி.செல்வராஜ், ஆர்.சுந்தரமூர்த்தி, முன்னாள் துணைத்தலைவர் டி.குணா என்கிற குணசேகரன், திருவெண்ணெய்நல்லூர் நகர செயலாளர் கணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி நன்றி கூறினார்.
Tags:    

Similar News