செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு

Published On 2020-11-25 08:20 GMT   |   Update On 2020-11-25 08:20 GMT
திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி உறையூர் அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விசாலாட்சி (வயது 68). இவர் கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News