செய்திகள்
கனமழை

சென்னை, செங்கல்பட்டில் விடிய விடிய கனமழை

Published On 2020-11-25 01:08 GMT   |   Update On 2020-11-25 01:13 GMT
நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை:

நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர புயலாக மாறியுள்ளது. மேலும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறுகிறது. 

இந்த அதி தீவிர புயல் 145 கி.மீட்டர் முதல் 155 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நிவர் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News