செய்திகள்
நிவர் புயல் எதிரொலி- முதலமைச்சரின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு
நிவர் புயல் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், இதுவரை 31 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, வரும் 27-ந்தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாகவும், பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், இதுவரை 31 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
அதன்படி, வரும் 27-ந்தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது.
இந்த நிலையில், நிவர் புயல் காரணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்படுவதாகவும், பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.