செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

மதுரை அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் பணம் திருட்டு

Published On 2020-11-24 04:53 GMT   |   Update On 2020-11-24 04:53 GMT
மதுரை அருகே வருவாய் ஆய்வாளர் வீட்டில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதூர்:

மதுரை அருகே உள்ள உத்தங்குடி வளர்நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவர் சிவகங்கை மாவட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் வினோத்குமார் தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதன் உள்ளே இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த சில பொருட்களை திருடிச் சென்றனர். நேற்று காலையில் வீடு திரும்பிய வினோத்குமார் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்பிரிவு கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News