செய்திகள்
கோவை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கோவை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை காந்திபுரம் பட்டேல் ரோட்டில் நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த புருசோத்தமன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.