செய்திகள்
கோப்புபடம்

பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2020-11-23 06:35 GMT   |   Update On 2020-11-23 06:35 GMT
பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
நன்னிலம்:

பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரளம் அருகே பன்னைநல்லூர் ஆற்றங்கரை தெருவில் சாராயம் விற்பனை நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணி (வயது75) என்பவர் வீட்டு அருகே சாராயம் விற்பது தெரியவந்தது. 

அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் மணியை கைது செய்தனர். இதேபோல் சாராய விற்பனையில் ஈடுபட்ட பூந்தோட்டம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பவரையும் போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News