செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

வரும் 25-ந்தேதி இரண்டு மாவட்டங்களுக்கு செல்லும் முதலமைச்சர்

Published On 2020-11-22 04:17 GMT   |   Update On 2020-11-22 04:17 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 25ம்தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், இதுவரை 31 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

இந்த நிலையில், வரும் 25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
Tags:    

Similar News