செய்திகள்
கைது

பூ வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

Published On 2020-11-21 11:58 GMT   |   Update On 2020-11-21 11:58 GMT
திருச்சி அருகே பூ வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:

திருச்சி ஸ்ரீரங்கம் சங்கிலிதோப்பை சேர்ந்தவர் பூ வியாபாரி கார்த்திக் (வயது 33). இவர் சங்கரன்பிள்ளை ரோட்டிலுள்ள காலை மார்க்கெட் வழியாக வந்தபோது கத்தியை காட்டி ரூ.600-ஐ கேட்டு மிரட்டிய ஓடத்துறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அரவிந்த், கோகுல் ஆகிய 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News