செய்திகள்
கைது

அரக்கோணம் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு வைத்திருந்தவர் கைது

Published On 2020-11-21 11:02 GMT   |   Update On 2020-11-21 11:02 GMT
அரக்கோணம் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த நாகவேடு பஜார் தெருவில் நேற்று காலை தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சுரேஷ் (வயது 37) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்ட சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, சுரேசை கைது செய்தனர்.
Tags:    

Similar News