செய்திகள்
கைது

நொய்யல் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2020-11-21 09:59 GMT   |   Update On 2020-11-21 09:59 GMT
நொய்யல் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து பரமத்தி செல்லும் சாலையில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த செல்வராஜ் (வயது 33), மற்றொரு செல்வராஜ் (40), மூர்த்தி (46), முருகேசன்(27), ரவி (46) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,100 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News