செய்திகள்
கைது

சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2020-11-17 09:08 GMT   |   Update On 2020-11-17 09:08 GMT
சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாநல்லூர்:

பெருமாநல்லூர் லட்சுமிகார்டன் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட ரவி (வயது 35), ராஜ் (25) , சேகர் (23) , முருகேசன் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 சேவல்கள், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News