செய்திகள்
கோப்புபடம்

கரூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

Published On 2020-11-13 09:42 GMT   |   Update On 2020-11-13 09:42 GMT
கரூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகுநாதபூபதி (வயது 33). மதுவிற்கு அடிமையான இவர், வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று முன்தினம் கரூர் மக்கள் பாதை பகுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி ரகுநாதபூபதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News