செய்திகள்
எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.2¼ லட்சம் திருட்டு
எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.2¼ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் கே.எம்.சி.தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் ஆனந்த் (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். காலை 7 மணி அளவில் மீண்டும் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.2¼ லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்த் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் கடையில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.