செய்திகள்
ஒகேனக்கல் அருவி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2020-11-12 07:54 GMT   |   Update On 2020-11-12 07:54 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி:

கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.



Tags:    

Similar News