செய்திகள்
மெரினா கடற்கரை

மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்?- ஐகோர்ட் கேள்வி

Published On 2020-11-11 07:07 GMT   |   Update On 2020-11-11 07:07 GMT
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பதில் தாமதம் ஏன்? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:

மெரினா கடற்கரை தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

மேலும் மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்? என சென்னை மாநகராட்சி, தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

இதையடுத்து மெரினா கடற்கரை நவம்பர் இறுதி வரை திறக்கப்படாது என ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மெரினாவில் பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


Tags:    

Similar News