செய்திகள்
பல்லடத்தில் ஆயில் கடையில் திடீர் தீ விபத்து
பல்லடத்தில் ஆயில் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன்கள் லோகநாதன் (வயது30), மணிகண்டன் (28). இவர்கள் இருவரும் தங்களது வீட்டின் கீழ் பகுதியில் வாகனங்களுக்குத் தேவையான ஆயில் கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு மேலே உள்ள வீட்டுக்குச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் பக்கத்து கடைக்காரர் உங்கள் கடையில் இருந்து புகை வருகிறது. என்று கூறினார். இதையடுத்து இருவரும் கடையை திறந்து பார்த்தபோது உள்ளே குபுகுபுவென தீ எரிந்துகொண்டிருந்தது. உடனே பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ உடனே அணைக்கப்பட்டதால் கடையின் பின்புறம், இருந்த பெட்ரோல் பங்க் தீ விபத்தில் இருந்து தப்பியது. பல்லடம் போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன்கள் லோகநாதன் (வயது30), மணிகண்டன் (28). இவர்கள் இருவரும் தங்களது வீட்டின் கீழ் பகுதியில் வாகனங்களுக்குத் தேவையான ஆயில் கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு மேலே உள்ள வீட்டுக்குச் சென்று விட்டனர். சிறிது நேரத்தில் பக்கத்து கடைக்காரர் உங்கள் கடையில் இருந்து புகை வருகிறது. என்று கூறினார். இதையடுத்து இருவரும் கடையை திறந்து பார்த்தபோது உள்ளே குபுகுபுவென தீ எரிந்துகொண்டிருந்தது. உடனே பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ உடனே அணைக்கப்பட்டதால் கடையின் பின்புறம், இருந்த பெட்ரோல் பங்க் தீ விபத்தில் இருந்து தப்பியது. பல்லடம் போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.